Home Actor M. K. Stalin HD Instagram Photos and Wallpapers March 2024 M. K. Stalin Instagram - 57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு! 1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார். தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, கோவையில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார் தமிழினத் தலைவர் கலைஞர். வரும் 2025-ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் #இரண்டாம்_உலகத்_தமிழ்ச்_செம்மொழி_மாநாடு நடைபெறவுள்ளது! சென்னையில் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் ஒன்று கூடுவோம்! உலகம் வியக்கத் தமிழை உயர்த்திப் பிடிப்போம்!

M. K. Stalin Instagram – 57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு! 1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார். தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, கோவையில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார் தமிழினத் தலைவர் கலைஞர். வரும் 2025-ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் #இரண்டாம்_உலகத்_தமிழ்ச்_செம்மொழி_மாநாடு நடைபெறவுள்ளது! சென்னையில் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் ஒன்று கூடுவோம்! உலகம் வியக்கத் தமிழை உயர்த்திப் பிடிப்போம்!

M. K. Stalin Instagram - 57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு! 1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார். தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, கோவையில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார் தமிழினத் தலைவர் கலைஞர். வரும் 2025-ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் #இரண்டாம்_உலகத்_தமிழ்ச்_செம்மொழி_மாநாடு நடைபெறவுள்ளது! சென்னையில் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் ஒன்று கூடுவோம்! உலகம் வியக்கத் தமிழை உயர்த்திப் பிடிப்போம்!

M. K. Stalin Instagram – 57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு!

1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார்.

தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, கோவையில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார் தமிழினத் தலைவர் கலைஞர்.

வரும் 2025-ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் #இரண்டாம்_உலகத்_தமிழ்ச்_செம்மொழி_மாநாடு நடைபெறவுள்ளது!

சென்னையில் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் ஒன்று கூடுவோம்! உலகம் வியக்கத் தமிழை உயர்த்திப் பிடிப்போம்! | Posted on 16/Mar/2024 13:58:14

M. K. Stalin Instagram – #நீங்கள்_நலமா இரண்டாம் கட்டமாக,

*அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், 
*ஆதி திராவிடர் நல விடுதி,
*மக்களைத் தேடி மருத்துவம் 
* மகளிர் சுயஉதவிக் குழு கடனுதவி

உள்ளிட்ட திட்டப் பயனாளிகளுடன் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் உள்ளிட்ட நமது அரசின் பிற திட்டங்களிலும் அவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

இப்படி நம் திட்டங்கள் அனைவருக்கும் பயனளிப்பதாக அமைவது கூடுதல் மனநிறைவைத் தருகிறது!
M. K. Stalin Instagram – விஷ்வகுருவா மவுனகுருவா?

கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார்.

தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?

கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? 

அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்?

படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்?

இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

இதற்கெல்லாம் பதிலில்லை; தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று #பதில்_சொல்லுங்க_பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை! ஆனால், வழக்கமான புளுகுகளும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன.

விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்?

தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்!

Check out the latest gallery of M. K. Stalin